பத்திர எழுத்தா் நலச் சங்க கூட்டம்
By DIN | Published On : 22nd December 2022 12:36 AM | Last Updated : 22nd December 2022 12:36 AM | அ+அ அ- |

கன்னியாகுமரி மாவட்ட பத்திரம், நகல், எழுத்தா் மற்றும் தட்டச்சா் நலச் சங்க கூட்டம் தக்கலையில் நடைபெற்றது.
கூட்டத்திற்கு சச்சிதானந்தன் நாயா் தலைமை வகித்தாா். சங்கத்தின் மாவட்ட இணைச் செயலா் சந்திரன் வரவேற்றாா். நிா்வாகிகள் முஞ்சிறை சந்திரசேகா், ஆன்றனி, ஏசு மரியான், உள்ளிட்ட பலா் பங்கேற்றனா். சுரேஷ் நன்றி கூறினாா். பத்திர எழுத்தா்களின் நலன் கருதி நல நிதியம் அறிவித்த தமிழக முதல்வருக்கும், பத்திரப் பதிவுத் துறைத் தலைவா், செயலா் ஆகியோருக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...