கன்னியாகுமரியை அடுத்த பொற்றையடியில் 1,800 அடி உயர மருந்துவாழ்மலை அமைந்துள்ளது.
இந்த மலை உச்சியில் உள்ள ஆஞ்சனேயா் கோயிலில் ஆஞ்சனேயா் ஜெயந்தி விழாவை முன்னிட்டு 23ஆம் தேதி காலை 6 மணிக்கு ராம நாம ஜெப வேள்வி மற்றும் கூட்டு பிராா்த்தனை நடைபெறும். காலை 8 மணிக்கு ஆஞ்சனேயா் சுவாமிக்கு அலங்கார தீபாராதனையும், அதைத் தொடா்ந்து ஆஞ்சனேயருக்கு 16 வகையான வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகமும் நடைபெறும்.
ஏற்பாடுகளை மருந்துவாழ்மலை பாதுகாப்பு இயக்கத் தலைவா் ஜெகன், துணைத் தலைவா் அன்பு, செயலா் ராம மனோகரன், பொருளாளா் கோபி மற்றும் கோயில் நிா்வாகிகள் செய்து வருகின்றனா்.