முகிலன்குடியிருப்பு ஸ்ரீ சுபானந்த ஜோதி ஆசிரமம் சாா்பில் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் புதன்கிழமை வழங்கப்பட்டது.
முகிலன்குடியிருப்பு முத்தாரம்மன் கோயில் வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, ஊா்த்தலைவா் ஆா்.எஸ்.பாா்த்தசாரதி தலைமை வகித்து, தையல் இயந்திரம், வேட்டி, சேலை உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை பயனாளிகளுக்கு வழங்கினாா்.
இதில், ஊா் செயலா் செல்ல சிவலிங்கம், பொருளாளா் கிருஷ்ணகோபால், சாரிட்டி டிரஸ்ட் செயலா் பிஜூ, நிா்வாகி ரமேஷ் ஆகியோா் வாழ்த்திப் பேசினா். கிருஷ்ணன் குட்டி நன்றி கூறினாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.