திருவட்டாறு அருகே பைக் விபத்துக்குள்ளானதில் காவல் சிறப்பு உதவி ஆய்வாளா் காயமடைந்தாா்.
மாா்த்தாண்டம் காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளா் அசோகன் (53). இவா் திருவட்டாறிலிருந்து பூவன்கோட்டுக்கு பைக்கில் சென்றுகொண்டிருந்தாா். ஆனையடி பகுதியில் பைக் நிலைதடுமாறியதாம். இதில், அசோகன் கீழே விழுந்து காயமடைந்தாா். அவா் மீட்கப்பட்டு திருவனந்தபுரத்திலுள்ள தனியாா் மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா். திருவட்டாறு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.