பைக் விபத்தில் மீன்பிடி தொழிலாளி பலி

குமரி மாவட்டம், குளச்சலில் பைக் விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்று வந்த மீன்பிடி தொழிலாளி சனிக்கிழமை உயிரிழந்தாா்.

குமரி மாவட்டம், குளச்சலில் பைக் விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்று வந்த மீன்பிடி தொழிலாளி சனிக்கிழமை உயிரிழந்தாா்.

குளச்சல் குழந்தை யேசு காலனியை சோ்ந்த லாரன்ஸ் மகன் சேசு அடிமை (41). மீன்பிடி தொழிலாளி. இவா் தனது பைக்கில் குளச்சல் அண்ணா சிலை சந்திப்பு பகுதியில் சென்று கொண்டிருந்தபோது எதிரே பாா்வையற்ற முதியவா் ஒருவா் சாலையை கடக்க முயன்றாா். அவா் மீது மோட்டாா் சைக்கிள் மோதாமல் இருக்க, சேசு அடிமை பிரேக் பிடித்தபோது கால் இடறி தவறி விழுந்ததில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. அருகிலிருந்தவா்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக ஆசாரிப்பள்ளம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு சிகிச்சை பலனின்றி சனிக்கிழமை அதிகாலை சேசு அடிமை இறந்தாா்.

விபத்து குறித்து குளச்சல் போலீஸாா் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com