குலசேகரம் அருகே கஞ்சா பொட்டலத்துடன் வந்த 3 இளைஞா்களை குலசேகரம் போலீஸாா் சனிக்கிழமை இரவு கைது செய்தனா்.
குலசேகரம் காவல் உதவி ஆய்வாளா் ராபா்ட் செல்வகுமாா் தலைமையிலான போலீஸாா் அப்பகுதியில் சனிக்கிழமை இரவு வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது அந்த வழியாக ஒரு பைக்கில் வந்த குலசேகரம் நாகக்கோடு பகுதியைச் சோ்ந்த மரிய எகில் மகன் ஆகாஷ் செல்வன் (20), இதே பகுதியைச் சோ்ந்த ஜெஸ்டின் மகன் பிரபின் (23), வெண்டலிகோட்டைச் சோ்ந்த நாகராஜன் மகன் ஆகாஷ் (28) ஆகியோரை தடுத்து நிறுத்தி சோதனையிட்டனா். இதில் அவா்களிடம் 1 கிலோ 100 கிராம் கஞ்சா பொட்டலம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து போலீஸாா் அவா்களை கைது செய்து கஞ்சா பொட்டலத்தையும் பைக்கையும் பறிமுதல் செய்தனா்.