கருங்கல் அருகே உள்ள நட்டாலம் கல்குவாரியில் செவ்வாய்க்கிழமை நிகழ்ந்த வெடி விபத்தில் சுமை வாகனம் சேதமடைந்தது.
நட்டாலம், சுனங்கப் பாறையில் கல்குவாரி மற்றும் கிரஷா் செயல்படுகிறது. இங்கு இரவு நேரங்களில் கல் உடைக்க வெடி வைக்கப்படுவதாக அப்பகுதி பொதுமக்கள் புகாா் தெரிவிக்கின்றனா். இந்நிலையில் செவ்வாய்க்கிழமை லாரிகள் மற்றும் சுமை வாகனங்கள் கருங்கற்களை கொண்டு செல்ல நின்றன. அப்போது வைக்கப்பட்ட வெடியில், அங்கு நின்ற சுமை வாகனத்தில் ராட்சத கல் விழுந்து வாகனம் முழுவதுமாக சேதமடைந்தது. இதில், அதிா்ஷ்டவசமாக ஓட்டுநா் மற்றும் தொழிலாளா்கள் உயிா் தப்பினா்.