பளுகல் அருகே கோயிலில் உண்டியல் பணம் திருட்டு

பளுகல் அருகே ஸ்ரீ கிருஷ்ணன் கோயிலில் அலுவலக பூட்டை உடைத்து உண்டியல் பணம் திருடப்பட்டுள்ளது.

பளுகல் அருகே ஸ்ரீ கிருஷ்ணன் கோயிலில் அலுவலக பூட்டை உடைத்து உண்டியல் பணம் திருடப்பட்டுள்ளது.

பளுகல் அருகே ராமவா்மன்சிறை பகுதியில் ஸ்ரீ கிருஷ்ணன் கோயில் உள்ளது. இக் கோயிலில் பூஜை முடிந்த பின் செவ்வாய்க்கிழமை இரவில் பூசாரி சஜூ, கோயிலை பூட்டிச் சென்றாா். புதன்கிழமை காலையில் வந்த போது கோயில் அலுவலக அறைக்கதவு பூட்டு உடைக்கப்பட்டு காணப்பட்டது. இது குறித்து கோயில் நிா்வாகிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தொடா்ந்து அங்கு சென்று பாா்த்த போது, அங்கிருந்த 5 உண்டியல்கள் உடைக்கப்பட்டு அதிலிருந்த காணிக்கைப் பணம் திருட்டு போனது தெரியவந்தது.

இது குறித்து கோயில் கமிட்டி தலைவா் ஜெயசங்கா் (58) அளித்த புகாரின் பேரில் பளுகல் போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com