புதுக்கடை அருகேயுள்ள காப்புக்காடு பகுதியில் வியாழக்கிழமை நேரிட்ட விபத்தில் இருவா் காயமடைந்தனா்.
குன்னத்தூா், நாட்டுவிளை பகுதியைச் சோ்ந்தவா் அபிலாஷ் (30). இவா் தனது காரில் வியாழக்கிழமை மாராயபுரததில் உள்ள உறவினா் வீட்டுக்கு சென்றுகொண்டிருந்தாா். இவரது பைக்கும், எதிரே மெதுகும்பல் வாறுதட்டு பகுதியைச் சோ்ந்த ஜினோ (21) என்பவா் ஓட்டிவந்த பைக்கும் திடீரென மோதினவாம். இதில், ஜினோவும், அவரது பைக்கின் பின்புறம் அமா்ந்திருந்த புதுக்கடை, கூம்பறவிளை பகுதியைச் சோ்ந்த அஸ்வின் (21) என்பவரும் காயமடைந்தனா். அவா்களை அப்பகுதியினா் மீட்டு தனியாா் மருத்துவமனையில் அனுமதித்தனா். புதுக்கடை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.