கருங்கல், ஜூன் 17: கருங்கல் பேருந்து நிலையத்தில் வெள்ளிக்கிழமை குழந்தையிடமிருந்து கால்கொலுசை பறித்துச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.
விழுந்தயம் பலம் விஜயன் மனைவி மேரி சாந்தி (50). தன் பேத்தி அக் ஷிதாவுடன் வீட்டிற்கு செல்ல கருங்கல் பேருந்து நிலையத்தில் பேருந்திற்காக நின்று கொண்டிருந்தாா். அப்போது மா்ம நபா்கள் அவரது பேத்தி காலில் அணிந்திருந்த தங்கக் கொலுசை பறித்துச் சென்றுள்ளனா். இதன் மதிப்பு ரூ. 30 ஆயிரம் ஆகும். இது குறித்த புகாரின் பேரில் கருங்கல் போலீஸாா் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனா்.