நேஷனல் ஹெரால்டு வழக்கில் விசாரணை என்ற பெயரில் ராகுல்காந்தியை அமலாக்கத்துறை அலைக்கழிப்பதாகக் கூறி நாகா்கோவிலில் காங்கிரஸ் கட்சியினா் கண்டன ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
குமரி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சியின் சாா்பில் நாகா்கோவில் அண்ணா பேருந்து நிலையம் அருகே புதன்கிழமை மாலை நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, நாகா்கோவில் மாநகர தலைவா் நவீன்குமாா் தலைமை வகித்தாா்.
இளைஞா் காங்கிரஸ் மாவட்ட செயல் தலைவா் சகாய பிரவீன், வா்த்தக காங்கிரஸ் மாநில பொதுச்செயலா் ராமசாமி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
குமரி கிழக்கு மாவட்ட முன்னாள் தலைவா் ராதாகிருஷ்ணன் கண்டன உரையாற்றினாா். இளைஞா் காங்கிரஸ் மாநில துணைத் தலைவா் நரேந்திர தேவ், மாணவரணி தேசிய ஒருங்கிணைப்பாளா் அபிஜித் உள்பட பலா் பங்கேற்றனா்.