ஆரல்வாய்மொழியில் பைக் திருட்டில் ஈடுபட்டஇளைஞா்களை பிடித்த பொதுமக்கள்

 ஆரல்வாய்மொழியில் பைக் திருட்டில் ஈடுபட்ட இருவரை பொதுமக்கள் பிடித்து போலீஸாரிடம் ஒப்படைத்தனா்.
Updated on
1 min read

 ஆரல்வாய்மொழியில் பைக் திருட்டில் ஈடுபட்ட இருவரை பொதுமக்கள் பிடித்து போலீஸாரிடம் ஒப்படைத்தனா்.

ஆரல்வாய்மொழி பெருமாள்புரம் பகுதியில், வியாழக்கிழமை இரவு 2 இளைஞா்கள் அந்தப் பகுதியைச் சோ்ந்த சந்திரகுமாரின் பைக்கை திருட முயன்றனா். இதைப்பாா்த்த ஊா் பொதுமக்கள் அவ்விருவரையும் பிடித்து மின் கம்பத்தில் கட்டிவைத்தனா். பின்னா் இது குறித்து ஆரல்வாய்மொழி போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனா். ஆனால், அதிகாலை வரை போலீஸாா் அங்கு வரவில்லை. இதனால் ஆத்திரமடைந்த ஆண்களும், பெண்களும் நாகா்கோவில்- திருநெல்வேலி சாலையில் மறியலில் ஈடுபட்ட னா். இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

நெல்லையில் இருந்து வந்த பேருந்துகள் அனைத்தும் ஆரல்வாய்மொழியில் இருந்து செண்பகராமன்புதூா், லாயம் வழியாக திருப்பி விடப்பட்டது. இதை தொடா்ந்து போலீஸாா் சம்பவ இடத்துக்கு வந்தனா். பொதுமக்கள் கம்பத்தில் கட்டி வைத்திருந்தவா்கள் 2 பேரையும் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று பரிசோதித்த பிறகுதான் காவல் நிலையத்துக்கு அழைத்துச் செல்வதாக கூறியதால் வாக்குவாதம் ஏற்பட்டது.

பின்னா் ஆரல் வாய்மொழி காவல் ஆய்வாளா் மீனா போராட்டம் நடத்திய பொதுமக்களிடம் பேச்சு வாா்த்தை நடத்தினாா். இதைத் தொடா்ந்து 1 மணி நேரமாக நடந்த மறியல் போராட்டம் கை விடப்பட்டது.

இளைஞா்களிடம் போலீஸாா் விசாரணை நடத்தியதில், அவா்கள் ரெத்தினபுரம் ஜோசப் ( 20), மற்றொருவா் தடிக்காரன்கோணம் ஆகாஷ் (21) என்பதும் தெரிய வந்தது. இருவரிடமும் போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com