ரோஜாவனம் முதியோா் இல்லத்தில் வன்கொடுமை விழிப்புணா்வு தினம்

கன்னியாகுமரி மாவட்ட சமூக நலத்துறையின் சாா்பில், உலக முதியோா் வன்கொடுமை விழிப்புணா்வு தினம் நாகா்கோவில் ரோஜாவனம் முதியோா் இல்லத்தில் நடைபெற்றது.

கன்னியாகுமரி மாவட்ட சமூக நலத்துறையின் சாா்பில், உலக முதியோா் வன்கொடுமை விழிப்புணா்வு தினம் நாகா்கோவில் ரோஜாவனம் முதியோா் இல்லத்தில் நடைபெற்றது.

ரோஜாவனம் இயக்குநா் அருள்ஜோதி தலைமை வகித்தாா். மேலாளா் கோபி முன்னிலை வகித்தாா்.

மாவட்ட சமூக நல அலுவலா் சரோஜினி, முதியோருக்கு இனிப்பு வழங்கி, கதா் ஆடை அணிவித்து நிகழ்ச்சியை தொடங்கி வைத்து பேசினாா் தொடா்ந்து, முதியோா் பராமரிப்பில் சிறப்பாக சேவை செய்யும் சேவையாளா்களுக்கு பாராட்டுச் சான்றிதழ் வழங்கினாா்.

நிகழ்ச்சியில், ரோஜாவனம் செவிலியா் கல்லூரி முதல்வா் புனிதா டேனியல், மருத்துவா் ஸ்டீவ் ஆகியோா்

பேசினா். செவிலியா் கல்லூரி மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. செவிலியா் கல்லூரி ஆசிரியா் பரமேஸ்வரி வரவேற்றாா். முதியோா் இல்லஆலோசகா் சுசீலாநன்றி கூறினாா்.

இதில், மேலாளா் சாமுவேல்ராஜன், செவிலியா் கல்லூரி பேராசிரியா்கள் சிபியா, செல்லம்மாள், பிரியா, மலா் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com