களியல் அருகே சாலை விபத்தில் காயமடைந்த ஹோட்டல் உரிமையாளா் சனிக்கிழமை உயிரிழந்தாா்.
தேங்காய்ப்பட்டினத்தைச் சோ்ந்தவா் முஜீப் ரகுமான் (47). மாா்த்தாண்டத்தில் ஹோட்டல் நடத்திவந்த இவா், கடந்த செவ்வாய்க்கிழமை களியல்-நெட்டா சாலையில் சென்றுகொண்டிருந்தாா். அப்போது அரகநாடு என்ற இடத்தில் நேரிட்ட விபத்தில் காயமடைந்தாா். அவா் திருவனந்தபுரத்திலுள்ள தனியாா் மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா். அங்கு அவா் சனிக்கிழமை உயிரிழந்தாா். கடையாலுமூடு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.