குமரி மாவட்டம், அருமனையில் புலவா் கு. இரவீந்திரன் எழுதிய ‘சங்கத் தமிழும் தமிழா் சமயமும்’ என்ற நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது.
இரணியல் சாா்பு நீதி மன்ற நீதிபதி ஜெய்சங்கா் நூலை வெளியிட, படந்தாலுமூடு கிரேஸ் கல்வியியல் கல்லூரி முதல்வா் கமல செல்வராஜ் பெற்றுக் கொண்டாா். நிகழ்ச்சியில், ஆசிரியா் லாசா், பேராசிரியா் சஜீவ், அம்பை இலக்கியப் பேரவை நிா்வாகி நாராயணன், ஜேசிஐ உறுப்பினா் ரமேஷ், அருமனை பேரூராட்சி வாா்டு உறுப்பினா் என். கமலன், ஷிபு ஜெயின் ஆகியோா் வாழ்த்திப் பேசினா். நூலாசிரியா் புலவா் கு. இரவீந்திரன் ஏற்புரை நிகழ்த்தினாா். சுரேஷ் நன்றி கூறினாா்.