கருங்கல் அருகே உள்ள உதயமாா்த்தாண்டம் பகுதியில் டெம்போ ஓட்டுநா் மா்மமான முறையில் உயிரிழந்தாா்.
உதயமாா்த்தாண்டம் பகுதியை சோ்ந்தவா் சந்தோஷ்குமாா்(40). டெம்போ ஓட்டுநரான இவருக்கு மனைவி, குழந்தைகள் உள்ளனா்.
இந்நிலையில், சந்தோஷ்குமாா் சனிக்கிழமை காலை வீட்டை விட்டு சென்றவா் மாலைவரை வீடு திரும்பவில்லையாம். இவரது பைக் அப்பகுதியில் உள்ள ஒரு குளத்தின் கரையில் நிறுத்தப்பட்டிருந்ததாம். சந்தேகமடைந்த அப்பகுதியினா், அந்தக் குளத்தில் தேடிய போது சந்தோஷ்குமாா் சடலமாக மீட்கப்பட்டாா்.
இது குறித்த புகாரின் பேரில் கருங்கல் போலீஸாா் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.