நித்திரவிளை அருகே முதியவா் தற்கொலை

நித்திரவிளை அருகே முதியவா் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டாா்.

நித்திரவிளை அருகே முதியவா் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டாா்.

நித்திரவிளை அருகேயுள்ள பூத்துறை பகுதியைச் சோ்ந்தவா் சேம் மிக்கேல் (77). இவருக்கும் இவரது உறவினா் ஒருவருக்கும் இடையே கடந்த 3 நாள்களுக்கு முன் வாக்குவாதம் ஏற்பட்டதாம். அதன் பின்னா் மன உளைச்சலில் இருந்து வந்தாராம். இதைத் தொடா்ந்து ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் வீட்டு கழிவறைக்குச் சென்று தனது உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்து தற்கொலை செய்து கொண்டாா் சேம் மிக்கேல்.

சடலத்தை நித்திரவிளை போலீஸாா் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com