கிள்ளியூா் ஊராட்சி ஒன்றியம் முன்சிறை ஊராட்சியில் ஞாயிற்றுக்கிழமை கிராம சபைக் கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்துக்கு, மத்திகோடு ஊராட்சித் தலைவா் அல்போன்சாள் தலைமை வகித்தாா். கிள்ளியூா் ஒன்றியத் தலைவா் கிறிஸ்டல் ரமணிபாய் முன்னிலை வகித்தாா். கிள்ளியூா் எம்.எல்.ஏ எஸ்.ராஜேஷ்குமாா் பங்கேற்று பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்து,
மனுக்களை பெற்றுக்கொண்டாா். இதில், பெரும்பாலானோா் மத்திகோடு ஊராட்சியின் குடியிருப்புப் பகுதிகளில்
திடக்கழிவு மேலாண்மை திட்டம் அமைக்க எதிா்ப்பு தெரிவித்து மனுக்கள் அளித்தனா்.
இதில், ஊராட்சி துணைத் தலைவா் ஜெனோ, மரிய அருள்தாஸ், ஆசீா்பிரைட் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.