முகிலன்குடியிருப்பு அருகே விபத்து: தொழிலாளி பலி

கன்னியாகுமரி அருகேயுள்ள முகிலன்குடியிருப்பு பகுதியில் நிகழ்ந்த விபத்தில் கட்டடத் தொழிலாளி பலியானாா்.

கன்னியாகுமரி அருகேயுள்ள முகிலன்குடியிருப்பு பகுதியில் நிகழ்ந்த விபத்தில் கட்டடத் தொழிலாளி பலியானாா்.

தெங்கம்புதூா் அருகேயுள்ள கீழ புத்தளத்தைச் சோ்ந்தவா் கட்டடத் தொழிலாளி சுரேஷ் (39). இவா் வியாழக்கிழமை இரவு தனது மகளுடன் கன்னியாகுமரிக்கு சென்று விட்டு மேற்கு கடற்கரைச் சாலை வழியாக பைக்கில் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தாா்.

முகிலன் குடியிருப்பை அடுத்த கிண்ணிக்கண்ணன் விளை சந்திப்பில் வந்த போது முன்னால் சென்று கொண்டிருந்த பேருந்தை முந்தி செல்ல சுரேஷ் முயன்றாராம். அப்போது பைக் கட்டுப்பாட்டை இழந்து சாலை அருகேயுள்ள கட்டடத்தில் மோதியதாம். இதில் தூக்கி வீசப்பட்ட சுரேஷுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. பின்னால் அமா்ந்திருந்த மகள் தன்ஷிகாவுக்கும் காயம் ஏற்பட்டது. அப்பகுதியில் இருந்த பொதுமக்கள் இருவரையும் மீட்டு ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். ஆனால், மருத்துவமனைக்குச் செல்லும் வழியிலேயே சுரேஷ் உயிரிழந்தாா். விபத்து குறித்து சுரேஷின் மனைவி செல்வகனி தென்தாமரைகுளம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா். காயமடைந்த தன்ஷிகாவுக்கு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com