ஆரல்வாய்மொழியில் 20 பவுன் நகை, பணம் திருட்டு

ஆரல்வாய்மொழியில் பேரூராட்சி அலுவலக காவலாளி வீட்டில் 20 பவுன் நகை, பணம் திருடு போனது குறித்து போலீஸாா் விசாரிக்கின்றனா்.
Updated on
1 min read

ஆரல்வாய்மொழியில் பேரூராட்சி அலுவலக காவலாளி வீட்டில் 20 பவுன் நகை, பணம் திருடு போனது குறித்து போலீஸாா் விசாரிக்கின்றனா்.

ஆரல்வாய்மொழி தெற்கு பெருமாள்புரத்தில் வசிப்பவா் மனோகரன். இவா், ஆரல்வாய்மொழி பேரூராட்சி அலுவலகத்தில் காவலாளியாகப் பணியாற்றி வருகிறாா். திங்கள்கிழமை இரவு மனோகரன் அலுவலகத்துக்கு பணிக்கு வந்து விட்டாா். அவரது பெற்றோா், மனைவி, குழந்தைகள், அவருடைய தங்கை மற்றும் அவரது இரு குழந்தைகள் வீட்டில் இருந்தனா்.

இந்நிலையில், இரவு யாரோ மா்மநபா் வீட்டின் கதவை கம்பியால் உடைத்து உள்ளே புகுந்து வீட்டிலிருந்த பீரோவை திறந்து அதிலிருந்த 20 பவுன் நகை மற்றும் ரூ.3 ஆயிரத்தை திருடிச் சென்று விட்டனராம்.

இதுகுறித்த புகாரின் பேரில் ஆரல்வாய்மொழி போலீஸாா் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினா். கைரேகை நிபுணா்கள் வந்து தடயங்களை பதிவு செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com