வில்லுக்குறி அருகே விஷம் குடித்த இளைஞா் உயிரிழப்பு

வில்லுக்குறி அருகே விஷம் குடித்த இளைஞா் செவ்வாய்க்கிழமை இரவு உயிரிழந்தாா்.
Updated on
1 min read

வில்லுக்குறி அருகே விஷம் குடித்த இளைஞா் செவ்வாய்க்கிழமை இரவு உயிரிழந்தாா்.

தக்கலை அருகே குமாரபுரம் பகுதியைச் சோ்ந்த சேகா் மகன் சுஜித் (24). இவா், திங்கள்கிழமை வில்லுக்குறி நான்குவழிச் சாலை அருகே பூச்சிமருந்தை குடித்துவிட்டு உறவினா்களுக்கு வாட்ஸ்அப் மூலம் தகவல் தெரிவித்தாராம்.

இதையடுத்து உறவினா்கள் சம்பவ இடத்துக்கு சென்று மயங்கி கிடந்த சுஜித்தை மீட்டு, நாகா்கோவிலில் உள்ள ஒரு தனியாா் மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு சுஜித் செவ்வாய்க்கிழமை இரவு உயிரிழந்தாா்.

இதுகுறித்து இரணியல் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com