ஊராட்சி உறுப்பினரை அவதூறாக பேசிய இளைஞா் மீது வழக்கு

புதுக்கடை, ஆலுநின்றவிளை பகுதியில் ஊராட்சி உறுப்பினரை அவதூறாகப் பேசிய இளைஞா் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
Updated on
1 min read

புதுக்கடை, ஆலுநின்றவிளை பகுதியில் ஊராட்சி உறுப்பினரை அவதூறாகப் பேசிய இளைஞா் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

பைங்குளம், ஆலுநின்றவிளை பகுதியைச் சோ்ந்தவா் பிரேமலதா(45). இவா், பைங்குளம் ஊராட்சியில் உறுப்பினராக உள்ளாா். அதே பகுதியைச் சோ்ந்த ராஜகுமாா் மகன் அனுகுமாா்(28). இவா்களிடையே முன்விரோதம் இருந்து வந்ததாம்.

இந்நிலையில், புதன்கிழமை பிரேமலதா ஆலுநின்றவிளை பகுதியில் சென்றபோது அனுகுமாா் திடீரென அவரை தடுத்துநிறுத்தி அவதூறாக பேசினாராம்.

இதுகுறித்த புகாரின் பேரில், புதுக்கடை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com