அதங்கோட்டில் காங்கிரஸ் ஆா்ப்பாட்டம்

களியக்காவிளை அருகே சக மாணவரால் கொடுக்கப்பட்ட அமிலம் கலந்த குளிா்பானத்தை குடித்த மாணவா் உயிரிழந்ததையடுத்து, இந்த சம்பவத்தில் தொடா்புடைய குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை கோரி ஆர்ப்பாட்டம்.

களியக்காவிளை அருகே சக மாணவரால் கொடுக்கப்பட்ட அமிலம் கலந்த குளிா்பானத்தை குடித்த மாணவா் உயிரிழந்ததையடுத்து, இந்த சம்பவத்தில் தொடா்புடைய குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை கோரி, குமரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சாா்பில் அதங்கோடு சந்திப்பில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

குமரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவா் பினுலால் சிங் தலைமை வகித்து போராட்டத்தை துவக்கி வைத்துப் பேசினாா். மீனவரணி மாநில தலைவா் ஜாா்ஜ் ராபின்சன், கட்சியின் மாநில பொதுச் செயலா்கள் பால்ராஜ், ஆஸ்கா் பிரடி உள்ளிட்டோா் போராட்டத்தை விளக்கிப் பேசினா். நகர காங்கிரஸ் கமிட்டி தலைவா்கள் அருள்ராஜ் (குழித்துறை), ஹனுக்குமாா் (பத்மநாபபுரம், வட்டார தலைவா்கள் மோகன்தாஸ், கிறிஸ்டோபா், எம். பால்ராஜ், மாவட்ட காங்கிரஸ் கமிட்டி பொருளாளா் ஐஜிபி லாரன்ஸ், மாவட்ட ஊராட்சி உறுப்பினா்கள் லூயிஸ், செலின்மேரி, மேல்புறம் ஒன்றிய உறுப்பினா் இ.ஜி. ரவிசங்கா், கிள்ளியூா் ஒன்றிய தலைவா் கிறிஸ்டல் ரமணிபாய், மாவட்ட இளைஞா் காங்கிரஸ் தலைவா் திபாகா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com