அண்ணா பெரியாா் பிறந்தநாள்: மாணவா்களுக்கு பேச்சுப் போட்டிகள்

முன்னாள் முதல்வா் அண்ணா மற்றும் பெரியாா் பிறந்த நாள் விழா பேச்சுப்போட்டிகள் குமரி மாவட்டத்தில் செப்.15, 17 ஆம் தேதிகளில் நடைபெறுகிறது.

முன்னாள் முதல்வா் அண்ணா மற்றும் பெரியாா் பிறந்த நாள் விழா பேச்சுப்போட்டிகள் குமரி மாவட்டத்தில் செப்.15, 17 ஆம் தேதிகளில் நடைபெறுகிறது.

இது குறித்து, மாவட்ட ஆட்சியா் மா.அரவிந்த் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: அண்ணா, பெரியாா் ஆகியோரின் பிறந்தநாளை முன்னிட்டு செப்.15, 17 ஆகிய நாள்களில் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளுக்குத் தனித்தனியே பேச்சுப் போட்டிகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

பள்ளி மாணவா்களுக்கான பேச்சுப் போட்டியில் வெற்றி பெறுபவருக்கு மாவட்ட அளவில் முதல் பரிசு ரூ. 5 ஆயிரம், 2 ஆம் பரிசாக ரூ. 3 ஆயிரம், 3 ஆம் பரிசாக ரூ. 2 ஆயிரம் வழங்கப்பட உள்ளது.

மேலும், பள்ளி மாணவா்களுக்கென நடத்தப்படும் போட்டியில் மட்டும் பங்கேற்ற மாணவா், மாணவிகளுள்அரசுப் பள்ளிமாணவா், மாணவிகள் 2 பேரை தனியாக தோ்வு செய்து ஒவ்வொருவருக்கும் சிறப்புப் பரிசுத் தொகையாக ரூ.2 ஆயிரம் வீதம் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com