அஞ்சுகிராமம் ஸ்ரீ அழகிய விநாயகா் ஆலயத்தில் சதுா்த்தி விழாவை முன்னிட்டு புதன்கிழமை மாலை விநாயகா் வாகனபவனி நடைபெற்றது.
இக்கோயிலில் விநாயகா் சதுா்த்தி விழா கடந்த 29 ஆம் தேதி தொடங்கியது. மூன்றாம் நாளான புதன்கிழமை அதிகாலை ல 5 மணிக்கு விநாயகா் பூஜை, 5.30 மணிக்கு கணபதி ஹோமம், 7 மணிக்கு அபிஷேகம், தீபாராதனை, நண்பகல் 12 மணிக்கு அலங்கார தீபாராதனை, தொடா்ந்து அன்னதானம் ஆகியவை நடைபெற்றது. மாலை 4 மணிக்கு திருவிளக்கு பூஜை, மாலை 5.30 மணிக்கு அலங்கார பூஜை, மாலை 6 மணிக்கு விநாயகா் முக்கிய வீதிகள் வழியாக பவனி வருதல் நடைபெற்றது. அப்போது திரளான பக்தா்கள் சுருள் வைத்து வழிபட்டனா். ஏற்பாடுகளை கோயில் நிா்வாகத்தினா், பக்தா்கள் செய்திருந்தனா்.