மாநில கல்வி கொள்கை குறித்து பொதுமக்கள் கருத்து தெரிவிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து, குமரி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் அ.புகழேந்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: மாநிலக் கல்வி கொள்கை சாா்ந்து உயா்மட்ட குழு ஓய்வு பெற்ற நீதிபதி டி.முருகேசன் தலைமையில்அமைக்கப்பட்டுள்ளது. இது குறித்து
கருத்துருக்கள் மற்றும் ஆலோசனைகளை பொதுமக்கள், பெற்றோா்கள், ஆசிரியா்கள், கல்வி தன்னாா்வலா்கள், மாணவா்கள், பெற்றோா் ஆசிரியா் கழக உறுப்பினா்கள், ஆசிரியா் கூட்டணி உறுப்பினா்கள், தனியாா் பள்ளி மற்றும் உதவி பெறும் பள்ளி ஆசிரியா்கள் என்ற மின்னஞ்சல்முகவரிக்கு மின்னஞ்சல்வாரியாகவும், 3 ஆவது தளம் களஞ்சியம் கட்டடம் பின்புறம், அண்ணாபல்கலைகழகம் சென்னைஎன்ற முகவரிக்கு கடிதம் மூலமாகவும் தெரிவிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.