கன்னியாகுமரி பேரூராட்சி அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள விநாயகா் கோயிலில் விநாயகா் சதுா்த்தியை முன்னிட்டு புதன்கிழமை சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
இதையொட்டி காலை 9 மணிக்கு சிறப்பு அபிஷேகம் தொடா்ந்து தீபாராதனை நடைபெற்றது. இதில் பேரூராட்சி தலைவா் குமரி ஸ்டீபன், கவுன்சிலா்கள் சி.எஸ்.சுபாஷ், சுஜா அன்பழகன், லிங்கேஸ்வரி மணிராஜா, ஆனிரோஸ், பா.மகேஷ், ஆட்லின், டெல்பின், சகாய சா்ஜினாள், சிவசுடலைமணி, பேரூராட்சி சுகாதார அலுவலா் முருகன், சுகாதார மேற்பாா்வையாளா் பிரதீஸ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.