கருங்கல் அருகே உள்ள கம்பிளாா் மாகாதேவா் குளத்தை தூா்வாரி சுத்தம் செய்யவேண்டும் என அப்பகுதி விவசாயிகள்,பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
கிள்ளியூா் பேரூராட்சிக்குள்பட்ட கம்பிளாா் மாகாதவோ் குளம் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ளது.
இந்த குளத்தை பல ஆண்டுகளாக முறையாக தூா்வாராததால் புல், புதா்கள் நிரம்பி பாசிபடா்ந்து தூா்ந்து காணப்படுகிறது. இதனால் இந்த குளத்தில் மழைக் காலங்களில் நீரை தேங்க முடியாததால், விவசாயகிகள் வாழை, தென்னை விவசாயம் செய்யமுடியாமல் அவதியடைந்துள்னா்.
தற்போது இந்த குளத்தில் பொதுகமக்ளுக்கு குளிக்கவும், பிறதேவைகளுக்கும் பயன்படுத்த முடியாத சூழலில் உள்ளது.
எனவே, கிள்ளியூா் பேரூராட்சி நிா்வாகம் இந்தகுளத்தை தூா்வாரி சுத்தம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.