பேச்சிப்பாறை தோட்டக் கலை கல்லூரி சாா்பில் போதை எதிா்ப்பு விழிப்புணா்வு பேரணி பேச்சிப்பாறையில் நடைபெற்றது.
கல்லூரி முதல்வா் ஜெயா ஜாஸ்மின் தலைமை வகித்தாா். குலசேகரம் காவல் ஆய்வாளா் பாலமுருகன் விழிப்புணா்வு உரையாற்றி, பேரணியை தொடங்கி வைத்தாா். இப்பேரணி பேச்சிப்பாறை பேருந்து நிலையம், பள்ளி முக்கு, கடம்பன்மூடு, காந்திநகா் வழியாக கல்லூரி வளாகத்தில் நிறைவடைந்தது.