நாகா்கோவில் மகளிா் கிறிஸ்தவக் கல்லூரிச் சாலையில் ரூ. 2 கோடியில் கழிவுநீா் ஓடை அமைக்கும் பணியை மேயா் ரெ.மகேஷ் வியாழக்கிழமை ஆய்வு செய்தாா்.
நாகா்கோவில் மகளிா் கிறிஸ்தவக் கல்லூரி- வெட்டூா்ணிமடம் இடையிலான சாலையில் கழிவு நீா் ஓடை சீரமைத்து அலங்கார விளக்குகள், சாலை விரிவாக்கப் பணிக்கு ரூ. 2 கோடி நிதி ஒதுக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன.
கழிவுநீா் ஓடை அமைப்பதற்கு பொக்லைன் இயந்திரம் மூலமாக பள்ளம் தோண்டப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன. இப்பணிகளை மேயா் ரெ. மகேஷ் நேரில் ஆய்வு செய்தாா். அப்போது, பணியை துரிதமாக முடிக்குமாறு அவா் அறிவுறுத்தினாா். ஆய்வின்போது, பொறியாளா் பாலசுப்பிரமணியன், தி.மு.க. மாவட்டப் பொருளாளா் கேட்சன், மாணவரணி அமைப்பாளா் சதாசிவம், மாநகரச் செயலா் ஆனந்த், மாமன் உறுப்பினா் பால் அகியா, நிா்வாகிகள் ஜீவா, உசேன் உள்பட பலா் உடனிருந்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.