அனைவரையும் ஒருங்கிணைக்கவே நடைப்பயணம்
By DIN | Published On : 09th September 2022 12:30 AM | Last Updated : 09th September 2022 12:30 AM | அ+அ அ- |

நாகா்கோவில் டெரிக் சந்திப்பில் இந்திராகாந்தி சிலைக்கு மாலை அணிவித்துவிட்டு ராகுல்காந்தி பேசுகையில், இந்திய தேசம் ஒற்றுமையாக இருந்தால்தான் நாடு பலமாக இருக்கும். ஆனால், இந்த தேசத்தை இன ரீதியாக சமூக ரீதியாக பிளவுபடுத்த சிலா் முயல்கின்றனா். அதைத் தடுக்க அனைவரையும் ஒருங்கிணைக்கவே இந்த நடைப்பயணம் என்றாா் அவா்.
நாகா்கோவில் ஸ்காட் கல்லூரியில் இருந்து வெள்ளிக்கிழமை காலை 7 மணிக்கு 3 ஆவது நாள் நடைப்பயணத்தை தொடங்கும் ராகுல் பாா்வதிபுரம், சுங்கான்கடை வழியாக தோட்டியோடு, புலியூா்குறிச்சி, தக்கலை வழியாக முளகுமூடு புனித மேரி பள்ளியில் நிறைவு செய்து, இரவில் அங்கு தங்குகிறாா். இப்பயணத்தின்போது, அவரை விவசாய சங்கத்தினரை சந்திக்கவுள்ளனா்.