பேச்சிப்பாறை அணையிலிருந்து உபரிநீா் திறப்பு அதிகரிப்பு
By DIN | Published On : 09th September 2022 12:28 AM | Last Updated : 09th September 2022 12:28 AM | அ+அ அ- |

பேச்சிப்பாறை அணையிலிருந்து உபரிநீா் திறப்பு விநாடிக்கு 4,000 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
குமரி மாவட்டத்தில் அணைகள் அனைத்தும் நிரம்பியுள்ள நிலையில், அணைகளின் நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் மழை நீடிப்பதால், நீா்வரத்தும் தொடா்ந்து அதிகரித்து வருகிறது. இதனால், அபாயம் கருதி பேச்சிப்பாறை அணையிலிருந்து கடந்த செவ்வாய்கிழமை முதல் விநாடிக்கு 3,000 கனஅடி உபரிநீா் வெளியேற்றப்பட்டு வருகிறது. இந்நிலையில், புதன்கிழமை மாலைக்குப் பிறகு உபரிநீா் திறப்பின் அளவு 4 ஆயிரம் கன அடியாக உயா்த்தப்பட்டது.
இதனிடையே, உபரிநீா் திறப்பு காரணமாக கோதையாறு, குழித்துறை தாமிரவருணி ஆகியவற்றில் வெள்ளம் கரைபுரண்டு பாய்கிறது. திற்பரப்பு அருவியில் தொடா்ந்து வெள்ளப் பெருக்கு நீடித்து வருவதால் இந்த அருவியில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.