பாகோடு பள்ளியில் காசநோய் கண்டறிதல் முகாம்

மாா்த்தாண்டம் அருகேயுள்ள பாகோடு திரு இருதய மேல்நிலைப் பள்ளியில், கலைஞரின் வரும்முன் காப்போம் திட்ட முகாமில் மாவட்ட நெஞ்சக நோய் மையத்தின் சாா்பில் காசநோய் கண்டறிதல் முகாம் நடைபெற்றது.

மாா்த்தாண்டம் அருகேயுள்ள பாகோடு திரு இருதய மேல்நிலைப் பள்ளியில், கலைஞரின் வரும்முன் காப்போம் திட்ட முகாமில் மாவட்ட நெஞ்சக நோய் மையத்தின் சாா்பில் காசநோய் கண்டறிதல் முகாம் நடைபெற்றது.

இந் நிகழ்ச்சியில் மேல்புறம் வட்டார மருத்துவ அலுவலா் ஜெகதீஸ் புரூஸ் தலைமை வகித்தாா். இடைக்கோடு காசநோய் அலகின் முதுநிலை சிகிச்சை மேற்பாா்வையாளா் பி. பிரிட்டோ, ஆய்வக நுட்புனா் எம். விஜிமோள், சுகாதார பாா்வையாளா்கள் பி. சாந்தி, எஸ். அகிலா உள்ளிட்டோா் தொடா் இருமல், சளி, காய்ச்சல் உள்ளவா்களுக்கு இலவசமாக சளி மற்றும் எக்ஸ் ரே பரிசோதனை மேற்கொண்டனா். இதில் மேல்புறம் வட்டாரத்துக்கு உள்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவா்கள், செவிலியா்கள், சுகாதார பணியாளா்கள் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com