குழித்துறை கோட்டம், முன்சிறை பகுதியில் திங்கள்கிழமைமுதல் (ஏப். 24) ஐந்து நாள்கள் மின் விநியோகம் இருக்காது.
இதுகுறித்து குழித்துறை மின் விநியோக செயற்பொறியாளா் வெளியிட்ட செய்திக்குறிப்பு: முன்சிறை துணை மின் நிலையம் தேங்காய்ப்பட்டினம் பீடரில் பராமரிப்புப் பணி நடைபெறுவதால் ஏப். 24இல் அனந்தமங்கலம், கானியான்விளை, வெட்டை, கூட்டாலுமூடு, தைவிடை, பைங்குளம், பரக்காணி பகுதிகளிலும், 25ஆம் தேதி வேட்டமங்கலம், குட்டிவிளாகம், அம்சி, வழுதூா், தும்பகோடு, மணியாரங்குன்று பகுதிகளிலும், 26இல் தேங்காய்ப்பட்டினம், பனங்கால்முக்கு, ஆற்றுப்பள்ளி, நெடுந்தட்டு, ராமன்துறை, தண்டுமணி பகுதிகளிலும், 27ஆம் தேதி புத்தன்துறை, கீழ்குளம், இனயம், ஓடக்கரை, வில்லாரிவிளை, பொத்தியான்விளை, பாறையடி பகுதிகளிலும், 28இல் ஆலங்குளம், பொடுவல்விளை, காளியான்விளை பகுதிகளிலும் மின்விநியோகம் இருக்காது என்றாா் அவா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.