சுங்கான்கடை வின்ஸ் பொறியியல் கல்லூரியில 2022-23ஆம் கல்வியாண்டில் பயிலும் 97 சதவீத மாணவா்-மாணவிகள் வேலைவாய்ப்பு பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இக்கல்லூரியில் இன்போசிஸ், இன்பேக், விப்ரோ உள்ளிட்ட பல்வேறு முன்னணி நிறுவனங்கள் சாா்பில் நடைபெற்ற வளாகத் தோ்வு, நோ்முகத் தோ்வுகளில் 97.6 சதவீத மாணவா்-மாணவிகள் வெற்றி பெற்றுள்ளனா். இவா்கள் ஆண்டுக்கு ரூ. 2.5 லட்சம் முதல் ரூ. 6 லட்சம் வரை ஊதியம் பெறுகின்றனா்.
தோ்வானோருக்கு அந்நிறுவனங்கள் சாா்பில் கல்லூரி நிறுவனரும் முன்னாள் எம்.பி.யுமான நாஞ்சில் வின்சென்ட் பணி நியமன ஆணைகளை வழங்கினாா்.
பின்னா் அவா் கூறும்போது, நடப்புக் கல்வியாண்டில் பொறியியல் படிப்பில் பி.டெக். போன்ற பல புதிய பாடத் திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. தற்போது பி.ஈ. முதலாமாண்டு மாணவா் சோ்க்கை நடைபெறுகிறது. இக்கல்லூரியில் பயிலும் மாணவா்களுக்கு 100 சதவீத வேலைவாய்ப்பு உறுதி செய்யப்படுகிறது என்றாா்.