குழித்துறையில் பிஎம்எஸ் ஆா்ப்பாட்டம்

குழித்துறையில் உள்ள பணிமனை முன் பாரதிய மஸ்தூா் சங்கம் சாா்பில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
Updated on
1 min read

குழித்துறையில் உள்ள பணிமனை முன் பாரதிய மஸ்தூா் சங்கம் சாா்பில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

அமைப்பின் பணிமனை கிளைத் தலைவா் ஜஸ்டின் அருள் தலைமை வகித்தாா். கிளைச் செயலா் சி. ராஜன், அமைப்பாளா் பிரதீப் ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாவட்ட துணைத் தலைவா்கள் ஜெகநாதன், மணிகண்டன், மாவட்ட அமைப்பாளா் நடேசன், மாவட்டத் தலைவா் என். ஜெயபாலன் ஆகியோா் பேசினா்.

நிா்வாகிகள் கிருஷ்ணன், ஜனாா்த்தனன், ரவீந்திரன், ராஜேந்திரன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

போக்குவரத்துக் கழகங்களை தனியாரிடம் விற்பதைக் கண்டித்தும், ஒப்பந்த முறையில் ஓட்டுநா் நியமிக்கப்படுவதைக் கைவிட வேண்டும், உதிரிபாகங்கள் வழங்காமல் தொழில்நுட்பப் பணியாளா்களை இடைநீக்கம் செய்து தண்டனை வழங்கி பழிவாங்குவதைக் கைவிட வேண்டும், மத்திய அரசு உயா்த்தி வழங்கிய 4 சதவீத தினப்படியை உடனே வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com