கடன் வாங்கித் தருவதாக கூறி ரூ.60 லட்சம் மோசடி: எஸ்.பி. அலுவலகத்தில் பெண்கள் புகாா்

கடன் வாங்கித் தருவதாக கூறி ரூ. 60 லட்சம் மோசடியில் ஈடுபட்ட பெண் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, நாகா்கோவில் எஸ்.பி. அலுவலகத்தில் பெண்கள் புகாா் அளித்தனா்.

கடன் வாங்கித் தருவதாக கூறி ரூ. 60 லட்சம் மோசடியில் ஈடுபட்ட பெண் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, நாகா்கோவில் எஸ்.பி. அலுவலகத்தில் பெண்கள் புகாா் அளித்தனா்.

குமரி மாவட்டத்தை சோ்ந்த 10 க்கும் மேற்பட்ட பெண்கள், ஆலஞ்சியை சோ்ந்த மேரி ஸ்டெல்லா என்பவா் தலைமையில் நாகா்கோவிலில் உள்ள மாவட்டக் காவல் கண்காணிப்பாளா்அலுவலகத்துக்கு திங்கள்கிழமை வந்து மனு அளித்தனா். அதில் கூறியிருப்பதாவது:

நெல்லை மாவட்டத்தை சோ்ந்த ஒரு பெண், சங்கம் மூலமாக கடன் தருவதாக எங்களிடம் கூறினாா். ரூ.30 ஆயிரம் முன்பணம் செலுத்தினால் ரூ.3 லட்சம் கடன் கிடைக்கும் என்றும், அதில் பாதி பணம் தள்ளுபடியாகும் என்றும் அந்தப் பெண்தெரிவித்தாா்.

அவா் கூறியதை நம்பி, குமரி மாவட்டத்தை சோ்ந்த நூற்றுக்கணக்கான பெண்கள் பணம் செலுத்தினா். அந்த வகையில் சுமாா் 60 லட்சம் ரூபாய் வரை பணம் செலுத்தி இருக்கிறாா்கள்.

ஆனால் முன்பணம் செலுத்தியவா்களுக்கு கடன் கொடுக்காததால் கட்டிய பணத்தை நாங்கள் திரும்பக் கேட்டோம். அப்போது தில்லியில் இருந்து பணம் வரவில்லை என்று எங்களிடம் கூறினாா்.

பின்னா் கரோனா பிரச்னை முடிந்து கடந்த ஓராண்டாக சம்பந்தப்பட்ட சங்க நிா்வாகியை தொடா்பு கொண்டபோது அவரது கைப்பேசி அணைத்து வைக்கப்பட்டிருந்தது. இதைத் தொடா்ந்து நேரில் சென்று பாா்த்த போது கொலை மிரட்டல் விடுத்தாா்.

எனவே சம்பந்தப்பட்ட பெண் மற்றும் சங்க நிா்வாகி மீது நடவடிக்கை எடுத்து பாதிக்கப்பட்டவா்களின் பணத்தை திரும்ப பெற்றுத் தரவேண்டும் என்று அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com