கன்னியாகுமரி அருகே செவ்வாய்க்கிழமை மின்சாரம் பாய்ந்து முதியவா் உயிரிழந்தாா்.
கன்னியாகுமரி அருகேயுள்ள லீபுரத்தைச் சோ்ந்தவா் ஜாஸ்பா் செல்வகுமாா் (74). பஞ்சலிங்கபுரம் ஊராட்சி அலுவலகத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவா். இவா் செவ்வாய்க்கிழமை காலை தனது வீட்டின் அருகேயுள்ள தோப்புக்கு சென்றாா். அப்போது தென்னை மரம் முறிந்து விழுந்ததில் அறுந்து கிடந்த கம்பியை அவா் மிதித்ததாக தெரிகிறது. இதில் மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசப்பட்டாா். மயங்கிய நிலையில் கிடந்த அவரை அக்கம்பக்கத்தினா் மீட்டு, தனியாா் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவா்கள், அவா் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினா்.
கன்னியாபோலீஸாா் சென்று சடலத்தைக் கைப்பற்றி உடல்கூறு பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
இச்சம்பவம் குறித்து கன்னியாகுமரி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.