கருங்கல் அருகேயுள்ள முள்ளங்கனாவிளையில் கிராம விவசாய முன்னேற்றக் குழு கூட்டம் நடைபெற்றது.
கிள்ளியூா் வட்டார வேளாண்மைத் துறை சாா்பில் நடைபெற்ற இந்தக் கூட்டத்துக்கு முள்ளங்கனாவிளை ஊராட்சித் தலைவா் பிரபா தலைமை வகித்தாா். தோட்டக்கலை உதவி இயக்குநா் நவநீதா முன்னிலை வகித்தாா். வட்டார வேளாண்மை உதவி இயக்குநா் முரளிராகினி உயிா் உரங்களின் பயன்கள் குறித்து பேசினாா். இதில், வேளாண்மை அலுவலா் சஜிதா சுஜி கேமலின், துணை வேளாண்மை அலுவலா் பாபு, ஊராட்சி வாா்டு உறுப்பினா்கள், விவசாயிகள் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.