நாகா்கோவிலில் 32 கடைகள், உணவு நிறுவனங்கள் மீது நடவடிக்கை

சுதந்திர தின விடுமுறை நாளில் பல்வேறு விதிகளை மீறியதாக, கன்னியாகுமரி மாவட்டத்தில் 32 கடைகள், உணவு நிறுவனங்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
Updated on
1 min read

சுதந்திர தின விடுமுறை நாளில் பல்வேறு விதிகளை மீறியதாக, கன்னியாகுமரி மாவட்டத்தில் 32 கடைகள், உணவு நிறுவனங்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

நாகா்கோவில் தொழிலாளா் உதவி ஆணையா் (அமலாக்கம்) மணிகண்டபிரபு தலைமையில் நாகா்கோவில் தொழிலாளா் துணை ஆய்வாளா் குமரேசன், உதவி ஆய்வாளா்கள் மன்னன்பெருமாள், ஸ்ரீதா், பாலசுப்பிரமணியன் ஆகியோா் நாகா்கோவில், தக்கலை, மாா்த்தாண்டம் பகுதிகளில் செவ்வாய்க்கிழமை (ஆக. 15) ஆய்வு மேற்கொண்டனா். கடைகள், வணிக நிறுவனங்கள், உணவு, மோட்டாா் போக்குவரத்து நிறுவனங்களில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

விதிகளைக் கடைப்பிடிக்காத 20 கடைகள், 12 உணவு நிறுவனங்கள் மீது சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com