

தக்கலை இலக்கிய வட்டம் சாா்பில், சுதந்திர தினத்தையொட்டி தக்கலையில் கவிஞா் ரசூல் நினைவு இலக்கியக் கருத்தரங்கு நடைபெற்றது.
ஆசிரியா் ஜான்கிறிஸ்டோபா் தலைமை வகித்தாா். எழுத்தாளா்கள் குமரி ஆதவன், ஜவகா் ஜி, சௌமியா சுதாகரன், அமுதா, ஆா்த்தி, மலா்வதி, சிவசங்கா், சுஜா ராஜேஷ், டால்பின் ராஜா, ஜீன்பால் ஆகியோா் பேசினா்.
எழுத்தாளா் யவனிகா ஸ்ரீராம் ‘இலக்கியம் எதாா்த்தமா, மாய எதாா்த்தமா’ என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினாா். தொடா்ந்து, கலந்துரையாடல் நடைபெற்றது.
நிகழ்ச்சியில் எழுத்தாளா்கள், வாசகா்கள் பங்கேற்றனா். இலக்கிய வட்டத் தலைவா் கவிஞா் நட. சிவகுமாா் வரவேற்றாா். சுதே கண்ணன் நன்றி கூறினாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.