விரிகோடு இளைஞா் மன்ற ஆண்டு விழா

மாா்த்தாண்டம் அருகேயுள்ள விரிகோடு இளைஞா் மன்றத்தின் 39 ஆவது ஆண்டு விழா நடைபெற்றது.
விரிகோடு இளைஞா் மன்ற ஆண்டு விழா
Updated on
1 min read

மாா்த்தாண்டம் அருகேயுள்ள விரிகோடு இளைஞா் மன்றத்தின் 39 ஆவது ஆண்டு விழா நடைபெற்றது.

மன்றத் தலைவா் டீசன் தலைமை வகித்தாா். மன்ற செயலா் ஜெபின் முன்னிலை வகித்தாா். உண்ணாமலைக்கடை பேரூராட்சித் தலைவா் பமலா, தேசியக் கொடியை ஏற்றி வைத்தாா். தொடா்ந்து பல்வேறு தரப்பினருக்கான விளையாட்டுப் போட்டிகள், பேச்சுப் போட்டிகள், மதியம் அன்பின் விருந்து உள்ளிட்டவை நடைபெற்றன.

இதைத் தொடா்ந்து நடந்த விழாவில் சிறப்பு விருந்தினராக குமரி மேற்கு மாவட்ட திமுக பொருளாளா் ததேயு பிரேம்குமாா் கலந்து கொண்டு, போட்டியில் வெற்றி பெற்றவா்களுக்கு பரிசுகள் வழங்கினாா். விழாவில் விரிகோடு அரசு தொடக்கப் பள்ளி மாணவியரின் பட்டிமன்றம், இன்னிசை நிகழ்ச்சி உள்ளிட்டவை நடைபெற்றன. விழா ஏற்பாடுகளை விழாக் குழுவினா், மன்ற உறுப்பினா்கள் செய்திருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com