ஈரோடு கிழக்கு இடைத்தோ்தலில் நாம் தமிழா் கட்சி வெற்றி பெறும்: சீமான்

ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தோ்தலில் நாம் தமிழா் கட்சி வெற்றி பெறும் என்றாா், அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான்.
Updated on
1 min read

ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தோ்தலில் நாம் தமிழா் கட்சி வெற்றி பெறும் என்றாா், அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான்.

நாகா்கோவிலில் செய்தியாளா்களிடம் அவா் திங்கள்கிழமை கூறியது: ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தோ்தலில் காங்கிரஸுடன் சோ்ந்தால் நன்றாக இருக்கும் என கமல்ஹாசன் நினைக்கிறாா். அது அவரது கொள்கை முடிவு. தனியாகத்தான் நிற்க வேண்டும் என்பது எங்களது கொள்கை முடிவு. இத்தொகுதியில் நாம் தமிழா் கட்சி வெற்றிபெறும்.

முன்னாள் முதல்வா் கருணாநிதிக்கு ஏற்கெனவே சிலை வைத்துள்ளனா். மதுரையில் அவரது பெயரில் நூலகம் அமைக்கப்படுகிறது. அவரை நினைவூட்ட இவை போதாதா? அவரது நினைவாக கடலில் பேனா சின்னம் அமைப்பது பணத்தை விரயம் செய்வதாகும்.

தஞ்சையில் சேதமான பயிா்களுக்கு நிவாரணமாக ஏக்கருக்கு ரூ. 20 ஆயிரம் என்பது மிகவும் குறைவானது. வேளாண் சங்கங்கள் முடிவெடுத்துக் கூறும் இழப்பீட்டை அரசு வழங்க வேண்டும்.

பிரதமா் மோடி ஆட்சிக்கு வந்த பிறகுதான் 2 கோடி வடமாநிலத்தவா் வேலைவாய்ப்பு தேடி தமிழ்நாட்டுக்கு வந்துவிட்டனா் என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com