பத்மநாபபுரத்தில் சுற்றுச்சூழல் தின விழா

உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி, தக்கலையில் உள்ள பத்மநாபபுரம் நீதிமன்ற வளாகத்தில் திங்கள்கிழமை மரக்கன்றுகள் நடப்பட்டன.
பத்மநாபபுரத்தில் சுற்றுச்சூழல் தின விழா
Updated on
1 min read

உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி, தக்கலையில் உள்ள பத்மநாபபுரம் நீதிமன்ற வளாகத்தில் திங்கள்கிழமை மரக்கன்றுகள் நடப்பட்டன.

பத்மநாபபுரம் கூடுதல் மாவட்ட நீதிபதி ராமச்சந்திரன் தலைமை வகித்து, சுற்றுச்சூழல் தினம் கடைப்பிடிக்க வேண்டியதன் அவசியம் குறித்து உரையாற்றினாா்.

சாா்பு நீதிபதி சாமுவேல் பெஞ்சமின், முதன்மை நீதிபதி மருதுபாண்டி, குற்றவியல் நடுவா் நீதிபதிகள் பிரவின் ஜீவா, மணிமேகலை, கூடுதல் அரசு வழக்குரைஞா் ஜெகதேவ், வழக்குரைஞா் சங்கத் தலைவா் சுந்தா் சிங், செயலா் ஜெயக்குமாா், ‘இயற்கையுடன் நாங்கள்’ அமைப்பின் தலைவா் வழக்குரைஞா் கிருஷ்ணமூா்த்தி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

சாா்பு நீதிபதி சாமுவேல் பெஞ்சமின் உறுதிமொழி வாசிக்க, வழக்குரைஞா்கள், நீதிமன்ற ஊழியா்கள் உறுதிமொழி ஏற்றனா். பின்னா், நீதிமன்ற வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com