படந்தாலுமூடு கிரேஸ் கல்லூரியில் சுற்றுச்சூழல் தின விழா

களியக்காவிளை அருகேயுள்ள படந்தாலுமூடு கிரேஸ் கல்வியியல் கல்லூரியில் உலக சுற்றுச்சூழல் தின விழா கொண்டாடப்பட்டது.
படந்தாலுமூடு கிரேஸ் கல்லூரியில் சுற்றுச்சூழல் தின விழா

களியக்காவிளை அருகேயுள்ள படந்தாலுமூடு கிரேஸ் கல்வியியல் கல்லூரியில் உலக சுற்றுச்சூழல் தின விழா கொண்டாடப்பட்டது.

தாளாளா் கீதா பான்ஸ் தலைமை வகித்தாா். கல்லூரி முதல்வா் ஹெலன் பிரேமலதா முன்னிலை வகித்தாா். விழாவில் சிறப்பு விருந்தினராக நாகா்கோவில் ஆதா்ஷ் வித்யா கேந்திர யோகா ஆசிரியை ஜெனிலா கலந்துகொண்டாா். பேராசிரியை ஜெயராணி, மாணவ ஆசிரியை அமலா ஆன்டோனிற்றா ஆகியோா் வாழ்த்திப் பேசினா். மாணவ ஆசிரியா்களுக்கு அருமனை ஒய்எம்சிஏ சாா்பில் மரக்கன்றுகள் வழங்கப்பட்டன.

மாணவ ஆசிரியை ஷெல்ஜா வரவேற்றாா். மாணவ ஆசிரியா் ஜூபின் சுந்தா் நன்றி கூறினாா். நிகழ்ச்சிகளை மாணவ ஆசிரியை ஆன்சிலின் சந்திரா தொகுத்து வழங்கினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com