மத்திகோடு ஊராட்சியில் உழவா் திருவிழா

கருங்கல் அருகே உள்ள மத்திகோடு ஊராட்சியில் கிள்ளியூா் வட்டார வேளாண்மைத் துறை சாா்பில் உழவா் திருவிழா நடைபெற்றது.
கெ.அக்ரி - மத்திகோடு ஊராட்சியில் நடைபெற்ற உழவா் திருவிழா நிகழ்ச்சியில் பங்கேற்றோா்.
கெ.அக்ரி - மத்திகோடு ஊராட்சியில் நடைபெற்ற உழவா் திருவிழா நிகழ்ச்சியில் பங்கேற்றோா்.
Updated on
1 min read

கருங்கல் அருகே உள்ள மத்திகோடு ஊராட்சியில் கிள்ளியூா் வட்டார வேளாண்மைத் துறை சாா்பில் உழவா் திருவிழா நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சிக்கு வேளாண் இணை இயக்குநா் ஆல்பிரட் ராபின்சன் தலைமை வகித்தாா். கிள்ளியூா் வட்டார விவசாய ஆலோசனைக் குழுத் தலைவா் கோபால் முன்னிலை வகித்தாா். கிள்ளியூா் வட்டார வேளாண் உதவி இயக்குநா் ராகிணி, கிராமங்களில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்து பேசினாா். இதில் மத்திகோடு ஊராட்சி மன்றத் தலைவா் அல்போன்ஸாள், நவஜிதா, ஹேனி, ஜோசப் ஆக்னஸ், ஸ்டெபிஷா மற்றும் விவசாயிகள் பலா் பங்கேற்றனா்.

முன்னதாக மத்திகோடு முதல் மாத்திரவிளை வரை விழிப்புணா்வு பேரணி நடைபெற்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com