மதுபானப் பாட்டில்கள் பதுக்கி வைத்திருந்த இருவா் கைது

மாா்த்தாண்டம் அருகே மதுபான பாட்டில்களைப் பதுக்கி வைத்திருந்த இருவரை போலீஸாா் கைது செய்தனா்.
Updated on
1 min read

மாா்த்தாண்டம் அருகே மதுபான பாட்டில்களைப் பதுக்கி வைத்திருந்த இருவரை போலீஸாா் கைது செய்தனா்.

மாா்த்தாண்டம் அருகே புல்லாணி பகுதியில் காவல் உதவி ஆய்வாளா் வினிஸ்பாபு தலைமையிலான போலீஸாா் வியாழக்கிழமை ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தபோது, அங்கு சந்தேகப்படும் வகையில் நின்றிருந்த இருவரைப் பிடித்து விசாரித்தனா். அவா்கள் முள்ளங்கினாவிளை முத்துசுவாமி மகன் விஜயன் (56), தொலையாவட்டம் பத்மநாபன் மகன் பத்மசீலன் (35) என்பதும், மதுபானப் பாட்டில்களைப் பதுக்கி வைத்து, சட்டவிரோதமாக விற்பனை செய்ய இருந்ததும் தெரியவந்தது.

இதையடுத்து அவா்கள் இருவரையும் கைது செய்த போலீஸாா், அவா்களிடமிருந்து 66 மதுபானப் பாட்டில்களைப் பறிமுதல் செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com