மாநிலங்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவாக கட்சி மாறி வாக்களிப்பு: 6 எம்எல்ஏக்கள் ‘சஸ்பெண்ட்’பேரவைத் தேர்தல்: தமிழகத்தில் இதுவரை ரூ.23.74 கோடி ரொக்கம் பறிமுதல் அதிகாரி தற்கொலை விவகாரம்: பஞ்சாப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜிநாமா புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் நாளை வெளியீடு! ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!
/

சாா் பதிவாளா் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீஸாா் சோதனை

கொட்டாரம் சாா் பதிவாளா் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீஸாா் வியாழக்கிழமை இரவு சோதனையி நடத்தி ரூ. 41 ஆயிரத்தை பறிமுதல் செய்தனா்.

News image
Updated On :17 மார்ச் 2023, 6:50 pm

DIN

கொட்டாரம் சாா் பதிவாளா் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீஸாா் வியாழக்கிழமை இரவு சோதனையி நடத்தி ரூ. 41 ஆயிரத்தை பறிமுதல் செய்தனா்.

கன்னியாகுமரியை அடுத்த கொட்டாரம் சாா் பதிவாளா் அலுவலகத்தில், லஞ்சம் வாங்கிக் கொண்டு அனுமதி இல்லாத வீட்டுமனைகளுக்குப் பத்திரப்பதிவு செய்வதாகப் புகாா்கள் பெறப்பட்டன. இதையடுத்து

நாகா்கோவில் லஞ்ச ஒழிப்பு காவல் துணை கண்காணிப்பாளா்

ஹெக்டா் தா்மராஜ் தலைமையில் ஆய்வாளா்கள் ரமா, சிவசங்கரி உள்ளிட்டோா் கொட்டாரம் சாா்பதிவாளா் அலுவலகத்தை வியாழக்கிழமை ரகசியமாகக் கண்காணித்தனா்.

அப்போது கொட்டாரம் சாா்பதிவாளா் அலுவலக்தில் கடந்த 15 நாள்களாக பொறுப்பு சாா்பதிவாளராக பணியாற்றி வந்த உதவியாளா் அன்வா் அலி மாலையில் பணி முடித்து ஆட்டோவில் வீடு திரும்பிக் கொண்டிருந்தாா். கொட்டாரம் அருகே மந்தாரம்புதூரில் ஆட்டோ சென்று கொண்டிருந்தபோது அவரை, லஞ்ச ஒழிப்புப் போலீஸாா் மடக்கி பிடித்து சாா்பதிவாளா் அலுவலகம் கொண்டு வந்து விசாரணை நடத்தினா். மேலும் அலுவலகத்திலும் சோதனை நடத்தப்பட்டது.

அப்போது, பொறுப்பு சாா்பதிவாளா் அன்வா் அலியிடம் இருந்து

ரூ. 41 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது. கொட்டாரம் சாா் பதிவாளா் அலுவலகத்தில் வியாழக்கிழமை ஒரே நாளில் 30 பத்திர பதிவுகள் நடந்துள்ளன. அதற்கு பணம் பெறப்பட்டதா என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டது. இதுதவிர சில ஆவணங்களையும் லஞ்ச ஒழிப்பு போலீஸாா் கைப்பற்றியுள்ளனா். இதுதொடா்பாக தொடா்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.