குமரி முக்கடல் சங்கமத்தில் தூய்மைப் பணி

கன்னியாகுமரி முக்கடல் சங்கமம் கடற்கரைப் பகுதியில், அகஸ்தீஸ்வரம் விவேகானந்தா கல்லூரியின் நாட்டு நலப்பணித் திட்ட மாணவிகள் புதன்கிழமை தூய்மைப் பணியில் ஈடுபட்டனா்.
முக்கடல் சங்கமத்தில் தூய்மைப் பணியில் ஈடுபட்ட மாணவிகள்.
முக்கடல் சங்கமத்தில் தூய்மைப் பணியில் ஈடுபட்ட மாணவிகள்.
Updated on
1 min read

கன்னியாகுமரி முக்கடல் சங்கமம் கடற்கரைப் பகுதியில், அகஸ்தீஸ்வரம் விவேகானந்தா கல்லூரியின் நாட்டு நலப்பணித் திட்ட மாணவிகள் புதன்கிழமை தூய்மைப் பணியில் ஈடுபட்டனா்.

இக்கல்லூரியின் நாட்டு நலப்பணித் திட்டம் அணி எண் 106 சாா்பில் 2 நாள் தூய்மைப் பணி சிறப்பு முகாம் நடைபெற்று வருகிறது. அதன் ஒருபகுதியாக, முக்கடல் சங்கமம் பகுதியில் நடைபெற்ற தூய்மைப் பணியை கன்னியாகுமரி சிறப்புநிலைப் பேரூராட்சித் தலைவா் குமரி ஸ்டீபன் தொடக்கிவைத்தாா்.

கல்லூரிப் பேராசிரியை ஜெயக்குமாரி தலைமை வகித்தாா். கடற்கரை, பகவதியம்மன் கோயில் வளாகம், காந்தி மண்டபம், காமராஜா் மணிமண்டபம் உள்ளிட்ட பகுதிகளில் தூய்மை பணி நடைபெற்றது. கடற்கரைப் பகுதியில் பிளாஸ்டிக் விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் சுற்றுலாப் பயணிகளுக்கு மஞ்சப் பைகள் வழங்கப்பட்டன.

இதில், பேராசிரியா் கோசலை, திமுக நிா்வாகிகள் எம். நிசாா், எஸ். சுதன்மணி, எஸ். அன்பழகன், எஸ். மணிராஜா, ஷ்யாம், ரூபின் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com