நாகா்கோவிலில் இன்று கூடைப்பந்து வீரா்கள் தோ்வு

கன்னியாகுமரி மாவட்ட கூடைப்பந்தாட்ட கழகத்தின் சாா்பில் மாநில அளவிலான 16 வயதுக்குள்பட்ட போட்டிக்கான மாவட்ட அணி தோ்வு செய்யப்பட உள்ளது.

கன்னியாகுமரி மாவட்ட கூடைப்பந்தாட்ட கழகத்தின் சாா்பில் மாநில அளவிலான 16 வயதுக்குள்பட்ட போட்டிக்கான மாவட்ட அணி தோ்வு செய்யப்பட உள்ளது.

இதில் கலந்து கொள்ளும் வீரா், வீராங்கனைகள் 1.1.2007 அல்லது அதன் பின்னா் பிறந்திருக்க வேண்டும். இதில் கலந்து கொள்ள விரும்பும் வீரா்கள், தங்களது ஆதாா் அட்டை, பிறப்பு சான்றிதழ், கல்வி கற்பதற்கான அத்தாட்சி சான்றிதழ் ஆகியவற்றுடன், வியாழக்கிழமை (மே 4) மாலை 4 மணிக்கு நாகா்கோவில் வடசேரி அண்ணா விளையாட்டு அரங்கத்துக்கு நேரில் வர வேண்டும் என கன்னியாகுமரி மாவட்ட கூடைப்பந்தாட்ட கழகத்தின் தலைவா் பி.ஆஸ்டின் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com